அதிரடி தீர்ப்பு: சுதந்திரப் போராட்ட தியாகியை அவமதித்த மத்திய காங்கிரஸ் அரசுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிரடி கேள்வி: அந்த 50,000 ரூபாய் நோட்டுகளிலிருக்கும் காந்தி சிரிப்பாரா?
------------------------------
நெல்லை அண்ணா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவின்போது, தன்னை திமுக எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட 4 பேர், உருட்டுகட்டையுடன் துணைவேந்தர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் தேவதாஸ் தெரிவித்தார்.
"உடற்கல்வி இயக்குனர் நல்ல உடல்பலத்துடன் இருக்கிறாரா என்பதை சோதித்துப் பார்க்கவே இந்த உருட்டுக்கட்டை ...அடி கொடுக்கப்பட்டது என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!"
------------------------------
தா.பாண்டியன் சொன்னது:தமிழக அரசு அறிவித்தபடி, அரசு கேபிள் டிவி முறையாக செயல்பட ஆரம்பித்தால், நாங்களே முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுப்போம்!
தா.பாண்டியன் சொல்லாதது: அப்படியே "கேபிள்கொண்டான்" என்ற பட்டமும் வழங்குவோம்!
------------------------------
வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். - செய்தி
விஜயகாந்த்: எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "கூட்டணி"
ராமதாஸ்: எனக்கு தமிழ்நாட்டில் பிடிக்காத ஒரே வார்த்தை "விஜயகாந்த்"
விஜயகாந்த் & ராமதாஸ்: எங்க ரெண்டு பேருக்கும் தமிழில் பிடித்த ஒரே வார்த்தை "பச்சோந்தி"
------------------------------
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட கண் பார்வையற்றோரை, புழல் சிறையில் அடைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, நள்ளிரவில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக எல்லோரையும் நடுரோட்டில் இறக்கி விட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டி அனுப்பியுள்ளனர். - வைகோ
கண் தெரியாதவர்கள் - மாற்றுத் திறனாளிகள்
காவல்துறை - ஏமாற்றுத் திறனாளிகள்!
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Wednesday, August 11, 2010
Thursday, January 28, 2010
காமெடி - சாவடி! வேட்டிக்காரன் - திரைவிமர்சனம்
அடுத்ததா நாம, பன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் காமெடிப் படைப்பான "வேட்டிக்காரன்" படத்தோட திரைவிமர்சனத்தை பார்ப்போம்!
"நான் குடிச்சா தூங்கமாட்டேன்!
நாலு ரவுண்டு தாங்க மாட்டேன்!
வாந்தி எடுக்காம வீடுபோயி சேரமாட்டேன்!"
என்ற ஓப்பனிங் சாங்லயே கதாநாயகன் குஜய் தன்னோட காமெடியைக் காட்டியிருக்காரு!
ஏழைக்குடும்பத்தில் பிறந்த கதாநாயகனுக்கு வேட்டி வாங்கக்கூட பணமில்லாததால வெறும் டெர்பி கம்பெனி ஜுன்ஸை மாட்டிக்கிட்டு திரியராரு! அவரு ஆசைப்பட்ட மாதிரி வேட்டியை வாங்கினாராங்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்!
இந்தப் படத்தோட கதாநாயகியா 'ஃபோர்ஷா" நடிச்சிருக்காங்க! 'நறுக்"னு நாலு டூயட், மூணு மவுத் கிஸ், ரெண்டே ரெண்டு வசனம், சிங்கிள் பீஸ் டிரெஸ்னு தன்னோட பாத்திரத்தை உணர்ந்து தாராளமா நடிச்சிருக்காங்க!
படத்தோட நாயகன் குஜய், எந்த வேலைக்கும் போகாம, நாலஞ்சு காமெடி பீஸ்களை கூட வச்சுக்கிட்டு நாட்டுல நடக்குற அநியாயங்களை தட்டிக் கேக்குறாரு!படத்துல நாயகனோட மோதுறதுக்காக புதுசா அறிமுகமாகற வில்லன் பெயர் "ரோல் கேப்" ரங்கா! பெயருக்கேத்த மாதிரி எந்நேரமும் ரோல் கேப்பை உடம்பு முழுக்க சுத்திக்கிட்டே வந்து மிரட்டுறாரு!
ஒரு சீன்ல, குடிபோதையில வேட்டியை நழுவ விடுற வில்லனைப் பார்த்து, ''வேட்டி அவுந்துடுச்சு டோய்!"" என அலறும்போது, டால்பி சவுண்ட் எபக்ட்ல நமக்கே கொஞ்சம் அதிரத்தான் செய்யுது!
படத்துல பஞ்ச் டயலாக்குக்கும் பஞ்சமேயில்லை... ரோட்டோரமா பூ விக்கிற கிழவிகிட்ட, "நான் ஜவுளிக்கடையில மட்டும்தான் ஜவுளி எடுப்பேன்! உன்னோட பூக்கடையில இல்ல!" என்ற பஞ்ச் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது!
கிளைமாக்ஸில் "எலி உருட்டுது! எலி உருட்டுது!
அரிசிப் பானை "தடதட"ங்குது!", என்ற பாட்டுக்கு மொத்த தியேட்டரும் ஆடுவதை பார்க்க முடியுது! வில்லனை பறந்துவந்து மிதிப்பதற்காக நாயகன் குஜய் எகிறும்போது, அவரோட தலை நிலாவுல போய் முட்டுற மாதிரி காட்டுறது பிரமிக்க வைக்குது!
மொத்தத்தில், வேட்டிக்காரன்... ஹாலிவுட் படங்களுக்கு போட்டிக்காரன்!
"நான் குடிச்சா தூங்கமாட்டேன்!
நாலு ரவுண்டு தாங்க மாட்டேன்!
வாந்தி எடுக்காம வீடுபோயி சேரமாட்டேன்!"
என்ற ஓப்பனிங் சாங்லயே கதாநாயகன் குஜய் தன்னோட காமெடியைக் காட்டியிருக்காரு!
ஏழைக்குடும்பத்தில் பிறந்த கதாநாயகனுக்கு வேட்டி வாங்கக்கூட பணமில்லாததால வெறும் டெர்பி கம்பெனி ஜுன்ஸை மாட்டிக்கிட்டு திரியராரு! அவரு ஆசைப்பட்ட மாதிரி வேட்டியை வாங்கினாராங்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்!
இந்தப் படத்தோட கதாநாயகியா 'ஃபோர்ஷா" நடிச்சிருக்காங்க! 'நறுக்"னு நாலு டூயட், மூணு மவுத் கிஸ், ரெண்டே ரெண்டு வசனம், சிங்கிள் பீஸ் டிரெஸ்னு தன்னோட பாத்திரத்தை உணர்ந்து தாராளமா நடிச்சிருக்காங்க!
படத்தோட நாயகன் குஜய், எந்த வேலைக்கும் போகாம, நாலஞ்சு காமெடி பீஸ்களை கூட வச்சுக்கிட்டு நாட்டுல நடக்குற அநியாயங்களை தட்டிக் கேக்குறாரு!படத்துல நாயகனோட மோதுறதுக்காக புதுசா அறிமுகமாகற வில்லன் பெயர் "ரோல் கேப்" ரங்கா! பெயருக்கேத்த மாதிரி எந்நேரமும் ரோல் கேப்பை உடம்பு முழுக்க சுத்திக்கிட்டே வந்து மிரட்டுறாரு!
ஒரு சீன்ல, குடிபோதையில வேட்டியை நழுவ விடுற வில்லனைப் பார்த்து, ''வேட்டி அவுந்துடுச்சு டோய்!"" என அலறும்போது, டால்பி சவுண்ட் எபக்ட்ல நமக்கே கொஞ்சம் அதிரத்தான் செய்யுது!
படத்துல பஞ்ச் டயலாக்குக்கும் பஞ்சமேயில்லை... ரோட்டோரமா பூ விக்கிற கிழவிகிட்ட, "நான் ஜவுளிக்கடையில மட்டும்தான் ஜவுளி எடுப்பேன்! உன்னோட பூக்கடையில இல்ல!" என்ற பஞ்ச் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது!
கிளைமாக்ஸில் "எலி உருட்டுது! எலி உருட்டுது!
அரிசிப் பானை "தடதட"ங்குது!", என்ற பாட்டுக்கு மொத்த தியேட்டரும் ஆடுவதை பார்க்க முடியுது! வில்லனை பறந்துவந்து மிதிப்பதற்காக நாயகன் குஜய் எகிறும்போது, அவரோட தலை நிலாவுல போய் முட்டுற மாதிரி காட்டுறது பிரமிக்க வைக்குது!
மொத்தத்தில், வேட்டிக்காரன்... ஹாலிவுட் படங்களுக்கு போட்டிக்காரன்!
Labels:
சிரிப்பு,
திரை விமர்சனம்,
நகைச்சுவை,
நையாண்டி
Sunday, January 3, 2010
திருவான்மியூரில் பாட்சா!
கிரிக்கெட் பிரியர்கள் அனைவராலும் ரசிக்கத்தக்க நடுவர்களில் முதன்மையான இடத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் இருக்கிறார். அவர் பவுண்டரி, சிக்ஸர்களுக்கு கையை ஆட்டும்விதமே அலாதியானது! அதுபோல ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸை இசைக்கும்போது ட்ரம்ஸ் ஸ்டிக்கை தூக்கிப்போட்டுப் பிடிப்பது கலக்கலாக இருக்கும்! இவர்களை நினைவுபடுத்தும் ஒரு நபர்தான் திருவான்மியூர் பகுதியில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றிவரும் சிவராமன் அவர்கள்.
இவரைப் பற்றிச் சொல்லுமுன் போக்குவரத்துக் காவலர்களைப் பற்றி ஒருசில விசயங்களைப் பகிர்ந்து கொள்வோம். போக்குவரத்துக் காவலர்கள் என்றாலே சாலை விதி மீறுவோரை ஓரங்கட்டிக் "கவனித்து" அனுப்புபவர்களாகத்தான் நம் அனுபவத்தில் காண முடியும். இவர்களுடைய பணியின் கடினத்தன்மையை நம்மால் உணர முடிவதில்லை.
சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி நிகழும் திடீர் போக்குவரத்து மாற்றங்களால் ஏற்படும் சாலை நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரும் சவாலான காரியம். சாலை நடுவே நின்றபடியே நாள் முழுவதும் வேலை செய்யும் இவர்களுக்கு "நெருக்கடி" வந்தால் ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியும் இருப்பதில்லை. நிற்பதற்கான கூண்டும் பல சந்திப்புகளில் நிறுவப்படவில்லை.
அதுபோகட்டும். இனி சிவராமன் அவர்களைப் பற்றி...
திருவான்மியூர் பகுதியில் சாலையில் பயணிக்கும் பலரும் சிவராமனைக் கவனிக்கத் தவறுவதில்லை. பாட்சா படத்தில் வரும் "நீ நடந்தால் நடையழகு" என்ற பாடலின் இடையே நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்துக் காவலர் போல வந்து சில நொடிகள் விதவிதமாக கைகளை ஆட்டி ரசிக்க வைப்பார். ஆனால் இந்த சிவராமனோ நாள் முழுதும் அதுபோல விதவிதமாக, வேகவேகமாக கைகளை ஆட்டி, போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் நேர்த்தி மிகமிக அழகு! இவரது சுறுசுறுப்பால் நெருக்கடியான போக்குவரத்தும் முடுக்கிவிடப்பட்டு ஒழுங்கான திசையில் வேகமெடுக்கும்! தனது பணியில் ஈடுபாட்டோடும், மாறுபட்டும் செயல்படும் இவரால் அவரது துறைசார்ந்த அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!
கொசுறாக ஒரு நகைச்சுவை:
" அந்த டிராபிக் போலீஸ் ரொம்ப பயந்த சுபாவம்"
"எப்படி சொல்ற?"
"சைரன் அடிச்சுகிட்டு ஆம்புலன்ஸ் கிராஸ் பண்ணினாக்கூட வெறப்பா நின்னு சல்யூட் அடிச்சு வழிவிடுவாரு!"
இவரைப் பற்றிச் சொல்லுமுன் போக்குவரத்துக் காவலர்களைப் பற்றி ஒருசில விசயங்களைப் பகிர்ந்து கொள்வோம். போக்குவரத்துக் காவலர்கள் என்றாலே சாலை விதி மீறுவோரை ஓரங்கட்டிக் "கவனித்து" அனுப்புபவர்களாகத்தான் நம் அனுபவத்தில் காண முடியும். இவர்களுடைய பணியின் கடினத்தன்மையை நம்மால் உணர முடிவதில்லை.
சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி நிகழும் திடீர் போக்குவரத்து மாற்றங்களால் ஏற்படும் சாலை நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரும் சவாலான காரியம். சாலை நடுவே நின்றபடியே நாள் முழுவதும் வேலை செய்யும் இவர்களுக்கு "நெருக்கடி" வந்தால் ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியும் இருப்பதில்லை. நிற்பதற்கான கூண்டும் பல சந்திப்புகளில் நிறுவப்படவில்லை.
அதுபோகட்டும். இனி சிவராமன் அவர்களைப் பற்றி...
திருவான்மியூர் பகுதியில் சாலையில் பயணிக்கும் பலரும் சிவராமனைக் கவனிக்கத் தவறுவதில்லை. பாட்சா படத்தில் வரும் "நீ நடந்தால் நடையழகு" என்ற பாடலின் இடையே நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்துக் காவலர் போல வந்து சில நொடிகள் விதவிதமாக கைகளை ஆட்டி ரசிக்க வைப்பார். ஆனால் இந்த சிவராமனோ நாள் முழுதும் அதுபோல விதவிதமாக, வேகவேகமாக கைகளை ஆட்டி, போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் நேர்த்தி மிகமிக அழகு! இவரது சுறுசுறுப்பால் நெருக்கடியான போக்குவரத்தும் முடுக்கிவிடப்பட்டு ஒழுங்கான திசையில் வேகமெடுக்கும்! தனது பணியில் ஈடுபாட்டோடும், மாறுபட்டும் செயல்படும் இவரால் அவரது துறைசார்ந்த அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!
கொசுறாக ஒரு நகைச்சுவை:
" அந்த டிராபிக் போலீஸ் ரொம்ப பயந்த சுபாவம்"
"எப்படி சொல்ற?"
"சைரன் அடிச்சுகிட்டு ஆம்புலன்ஸ் கிராஸ் பண்ணினாக்கூட வெறப்பா நின்னு சல்யூட் அடிச்சு வழிவிடுவாரு!"
Labels:
அனுபவம்,
கட்டுரை,
நகைச்சுவை,
போக்குவரத்து
Wednesday, December 30, 2009
அரசியல்வாதிகள், புத்தாண்டு ஜோஸியம் சொல்றாங்க!
வரப்போற 2010ஆம் ஆண்டில், தங்கள் அரசியல் எப்படி இருக்குமென தமிழ்நாட்டின் முன்னணிக் கட்சித்தலைவர்களிடம் கேட்டபோது...
(பதில்களிலிருந்தே சொன்னவர் யாரென்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!)
அடுத்த ஆண்டிலிருந்து, எந்தக் கட்சி கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட முன்வருகிறதோ, அந்தக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போமென தெளிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
------------------------
வரும் ஆண்டு, செம்மொழித் தமிழ் ஆண்டு! கனிமொழிக்காக புதிய வரலாறு எழுதவுள்ள செம்மொழி மாநாட்டு ஆண்டு! அடுத்து எங்களுடய இலக்கு, அனைவரும் மின்சாரம் இல்லாத நேரத்திலும் கவலையில்லாமல் பொழுதுபோக்க, இலவச தாயக்கட்டை, பல்லாங்குழி, சீட்டுக்கட்டு, கோலிக்குண்டுகளை வழங்குவதே என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
------------------------
இலவசங்களை அள்ளிக் கொடுத்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொண்டிருப்பவர்கள் வரும் ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திப்பது உறுதி! அதுவே அவர்களின் குடும்ப அரசியலுக்கு இறுதியாக அமையுமென்பதும் உறுதி! நான் ஓய்வெடுக்கவில்லை, ஒதுங்கியிருக்கவும் இல்லை... பதுங்கியிருக்கிறேன் என்பதை விரைவில் புரிய வைப்பேன் என சபதமெடுக்கிறேன்!
------------------------
மாமா நேருவின் கனவை, அவரது மகள், அன்னை இந்திரா காந்தியின் கொள்கையை, அவரது மகன் ராஜீவ் காந்தியின் லட்சியத்தை, அவர் மனைவி, அன்னை சோனியாகாந்தியின் ஆசியுடன், அவரது மகன் ராகுல்காந்தி வழி நடத்த, தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்து கோஷ்டிகளும் இணைந்து, அடுத்த ஆண்டில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து முடிவெடுக்க உள்ளதை அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மேலிடப் பார்வையாளர் உங்களுக்கு இப்போது விளக்குவார்!
------------------------
இனி அடுத்த ஆண்டிலிருந்து இடைத்தேர்தல் என்பதே கூடாது என்ற முடிவினை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்! அப்படி இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் வாக்குச்சீட்டினைப் பயன்படுத்த வேண்டும். எங்களைப் போன்ற வளரும் கட்சிகளை திமுக, அதிமுக போன்ற வளர்ந்த கட்சிகள், கூட்டணிக்குள் சேர்க்காமல் தோற்கடிக்கச் சதி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும்! எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் அடுத்த ஆண்டில் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!
------------------------
அடுத்த ஆண்டு கட்சி நடத்துறதா வேண்டாமான்னு கட்சி நடத்த நிதியுதவி செய்யுற என்னோட மனைவியை ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேன்! அவங்க என்னோட அரசி மட்டுமில்லை, என்னோட செல்லமும்!
------------------------
வரப்போற ஆண்டு 2010! ஆட்சிக்கு வரப்போகுது ஆபத்து! இந்த டிஆர் வரப்போறான் இன்னொரு சுத்து!
நயந்தாரா குடுக்குறா பூங்கொத்து! ஆண்டவா! எம்பையனக் காப்பாத்து!
------------------------
(பதில்களிலிருந்தே சொன்னவர் யாரென்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!)
அடுத்த ஆண்டிலிருந்து, எந்தக் கட்சி கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட முன்வருகிறதோ, அந்தக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போமென தெளிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
------------------------
வரும் ஆண்டு, செம்மொழித் தமிழ் ஆண்டு! கனிமொழிக்காக புதிய வரலாறு எழுதவுள்ள செம்மொழி மாநாட்டு ஆண்டு! அடுத்து எங்களுடய இலக்கு, அனைவரும் மின்சாரம் இல்லாத நேரத்திலும் கவலையில்லாமல் பொழுதுபோக்க, இலவச தாயக்கட்டை, பல்லாங்குழி, சீட்டுக்கட்டு, கோலிக்குண்டுகளை வழங்குவதே என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
------------------------
இலவசங்களை அள்ளிக் கொடுத்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொண்டிருப்பவர்கள் வரும் ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திப்பது உறுதி! அதுவே அவர்களின் குடும்ப அரசியலுக்கு இறுதியாக அமையுமென்பதும் உறுதி! நான் ஓய்வெடுக்கவில்லை, ஒதுங்கியிருக்கவும் இல்லை... பதுங்கியிருக்கிறேன் என்பதை விரைவில் புரிய வைப்பேன் என சபதமெடுக்கிறேன்!
------------------------
மாமா நேருவின் கனவை, அவரது மகள், அன்னை இந்திரா காந்தியின் கொள்கையை, அவரது மகன் ராஜீவ் காந்தியின் லட்சியத்தை, அவர் மனைவி, அன்னை சோனியாகாந்தியின் ஆசியுடன், அவரது மகன் ராகுல்காந்தி வழி நடத்த, தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்து கோஷ்டிகளும் இணைந்து, அடுத்த ஆண்டில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து முடிவெடுக்க உள்ளதை அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மேலிடப் பார்வையாளர் உங்களுக்கு இப்போது விளக்குவார்!
------------------------
இனி அடுத்த ஆண்டிலிருந்து இடைத்தேர்தல் என்பதே கூடாது என்ற முடிவினை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்! அப்படி இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் வாக்குச்சீட்டினைப் பயன்படுத்த வேண்டும். எங்களைப் போன்ற வளரும் கட்சிகளை திமுக, அதிமுக போன்ற வளர்ந்த கட்சிகள், கூட்டணிக்குள் சேர்க்காமல் தோற்கடிக்கச் சதி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும்! எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் அடுத்த ஆண்டில் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!
------------------------
அடுத்த ஆண்டு கட்சி நடத்துறதா வேண்டாமான்னு கட்சி நடத்த நிதியுதவி செய்யுற என்னோட மனைவியை ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேன்! அவங்க என்னோட அரசி மட்டுமில்லை, என்னோட செல்லமும்!
------------------------
வரப்போற ஆண்டு 2010! ஆட்சிக்கு வரப்போகுது ஆபத்து! இந்த டிஆர் வரப்போறான் இன்னொரு சுத்து!
நயந்தாரா குடுக்குறா பூங்கொத்து! ஆண்டவா! எம்பையனக் காப்பாத்து!
------------------------
Monday, December 28, 2009
என்ன டுமைக்கொ வணன்சரா!
தலைப்பு புரியலையாங்க? எனக்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது... மேல படிங்க, நீங்களும் இப்படிப் பேசத் தொடங்கிடுவீங்க!
தீப்பெட்டி இருக்கா? குதிரைக்கு எத்தனை காலு?! என எஸ்.வீ.சேகர் படத்தில் சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதை கேட்டுச் சிரித்திருப்போம். இப்படி சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதில் இன்னொரு வகைதான் அடுத்தவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அதன்மூலமாக அவரைப் பற்றி கிசுகிசு (நம்ம தமிழில் பொரணி)பேசுவது! மிகவும் சுவாரசியமாக வீடு, அலுவலகம் என அனைத்து மட்டத்திலும் இந்த பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது! (கொசுறு: இந்த வழக்கம், மன்னர் காலத்திலிருந்தே இருந்து வருவதை கல்வெட்டுகள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது!)
இந்த கிசுகிசுவில் சற்று மேம்பட்ட முறையாக, எனது அலுவலகத் தோழி, இன்னொரு வகை பேச்சுவழக்கு முறையை செயல்படுத்தி வருகிறார். இதன் சூத்திரம், எந்த வார்த்தையையும் இரண்டாகப் பிளந்து முன்பின் மாற்றி ஒட்டி பயன்படுத்துவது தான்! (இந்நேரத்தில் உங்களுக்கு விவேக் காமெடி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) இதன்படியாக கவுதம் என்ற எனது பெயர் தம்கவ் என்றாகி விடும். சீனி என்ற பெயர் னிசீ என்றாகி விடும்! இதுபோலவே, "நீ வெட்டியா இருக்கியா" என்பதை "நீ டிவெட்டா?" எனக் கேட்பது மிகவும் சகஜம்! திமிர் என்ற வார்த்தை கூட மிர்த்தி என்றாகும்! "உனக்கு ரொம்ப மிர்த்திப்பா!"
இதுமாதிரி பேசுவது குறிப்பிட்ட சில நண்பர்கள் வட்டத்துக்குள் நடக்குமென்பதால் "கிசுகிசு" பேசுவதே கலகலப்பான விசயமாக இருக்கும்! முதலில் இப்படிப் பேசுவது கடினமாக தோன்றினாலும் தொடர்ந்து பேசினால் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்! இப்போது உங்களுக்கு தலைப்பு புரிந்திருக்குமே! எங்கே, நீங்களும் கொஞ்சம் ப்ரீட்சித்துப் பாருங்களேன்! :)
தீப்பெட்டி இருக்கா? குதிரைக்கு எத்தனை காலு?! என எஸ்.வீ.சேகர் படத்தில் சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதை கேட்டுச் சிரித்திருப்போம். இப்படி சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதில் இன்னொரு வகைதான் அடுத்தவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அதன்மூலமாக அவரைப் பற்றி கிசுகிசு (நம்ம தமிழில் பொரணி)பேசுவது! மிகவும் சுவாரசியமாக வீடு, அலுவலகம் என அனைத்து மட்டத்திலும் இந்த பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது! (கொசுறு: இந்த வழக்கம், மன்னர் காலத்திலிருந்தே இருந்து வருவதை கல்வெட்டுகள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது!)
இந்த கிசுகிசுவில் சற்று மேம்பட்ட முறையாக, எனது அலுவலகத் தோழி, இன்னொரு வகை பேச்சுவழக்கு முறையை செயல்படுத்தி வருகிறார். இதன் சூத்திரம், எந்த வார்த்தையையும் இரண்டாகப் பிளந்து முன்பின் மாற்றி ஒட்டி பயன்படுத்துவது தான்! (இந்நேரத்தில் உங்களுக்கு விவேக் காமெடி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) இதன்படியாக கவுதம் என்ற எனது பெயர் தம்கவ் என்றாகி விடும். சீனி என்ற பெயர் னிசீ என்றாகி விடும்! இதுபோலவே, "நீ வெட்டியா இருக்கியா" என்பதை "நீ டிவெட்டா?" எனக் கேட்பது மிகவும் சகஜம்! திமிர் என்ற வார்த்தை கூட மிர்த்தி என்றாகும்! "உனக்கு ரொம்ப மிர்த்திப்பா!"
இதுமாதிரி பேசுவது குறிப்பிட்ட சில நண்பர்கள் வட்டத்துக்குள் நடக்குமென்பதால் "கிசுகிசு" பேசுவதே கலகலப்பான விசயமாக இருக்கும்! முதலில் இப்படிப் பேசுவது கடினமாக தோன்றினாலும் தொடர்ந்து பேசினால் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்! இப்போது உங்களுக்கு தலைப்பு புரிந்திருக்குமே! எங்கே, நீங்களும் கொஞ்சம் ப்ரீட்சித்துப் பாருங்களேன்! :)
Subscribe to:
Posts (Atom)