அதிரடி தீர்ப்பு: சுதந்திரப் போராட்ட தியாகியை அவமதித்த மத்திய காங்கிரஸ் அரசுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிரடி கேள்வி: அந்த 50,000 ரூபாய் நோட்டுகளிலிருக்கும் காந்தி சிரிப்பாரா?
------------------------------
நெல்லை அண்ணா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவின்போது, தன்னை திமுக எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட 4 பேர், உருட்டுகட்டையுடன் துணைவேந்தர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் தேவதாஸ் தெரிவித்தார்.
"உடற்கல்வி இயக்குனர் நல்ல உடல்பலத்துடன் இருக்கிறாரா என்பதை சோதித்துப் பார்க்கவே இந்த உருட்டுக்கட்டை ...அடி கொடுக்கப்பட்டது என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!"
------------------------------
தா.பாண்டியன் சொன்னது:தமிழக அரசு அறிவித்தபடி, அரசு கேபிள் டிவி முறையாக செயல்பட ஆரம்பித்தால், நாங்களே முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுப்போம்!
தா.பாண்டியன் சொல்லாதது: அப்படியே "கேபிள்கொண்டான்" என்ற பட்டமும் வழங்குவோம்!
------------------------------
வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். - செய்தி
விஜயகாந்த்: எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "கூட்டணி"
ராமதாஸ்: எனக்கு தமிழ்நாட்டில் பிடிக்காத ஒரே வார்த்தை "விஜயகாந்த்"
விஜயகாந்த் & ராமதாஸ்: எங்க ரெண்டு பேருக்கும் தமிழில் பிடித்த ஒரே வார்த்தை "பச்சோந்தி"
------------------------------
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட கண் பார்வையற்றோரை, புழல் சிறையில் அடைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, நள்ளிரவில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக எல்லோரையும் நடுரோட்டில் இறக்கி விட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டி அனுப்பியுள்ளனர். - வைகோ
கண் தெரியாதவர்கள் - மாற்றுத் திறனாளிகள்
காவல்துறை - ஏமாற்றுத் திறனாளிகள்!
Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts
Wednesday, August 11, 2010
Thursday, January 28, 2010
காமெடி - சாவடி! வேட்டிக்காரன் - திரைவிமர்சனம்
அடுத்ததா நாம, பன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் காமெடிப் படைப்பான "வேட்டிக்காரன்" படத்தோட திரைவிமர்சனத்தை பார்ப்போம்!
"நான் குடிச்சா தூங்கமாட்டேன்!
நாலு ரவுண்டு தாங்க மாட்டேன்!
வாந்தி எடுக்காம வீடுபோயி சேரமாட்டேன்!"
என்ற ஓப்பனிங் சாங்லயே கதாநாயகன் குஜய் தன்னோட காமெடியைக் காட்டியிருக்காரு!
ஏழைக்குடும்பத்தில் பிறந்த கதாநாயகனுக்கு வேட்டி வாங்கக்கூட பணமில்லாததால வெறும் டெர்பி கம்பெனி ஜுன்ஸை மாட்டிக்கிட்டு திரியராரு! அவரு ஆசைப்பட்ட மாதிரி வேட்டியை வாங்கினாராங்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்!
இந்தப் படத்தோட கதாநாயகியா 'ஃபோர்ஷா" நடிச்சிருக்காங்க! 'நறுக்"னு நாலு டூயட், மூணு மவுத் கிஸ், ரெண்டே ரெண்டு வசனம், சிங்கிள் பீஸ் டிரெஸ்னு தன்னோட பாத்திரத்தை உணர்ந்து தாராளமா நடிச்சிருக்காங்க!
படத்தோட நாயகன் குஜய், எந்த வேலைக்கும் போகாம, நாலஞ்சு காமெடி பீஸ்களை கூட வச்சுக்கிட்டு நாட்டுல நடக்குற அநியாயங்களை தட்டிக் கேக்குறாரு!படத்துல நாயகனோட மோதுறதுக்காக புதுசா அறிமுகமாகற வில்லன் பெயர் "ரோல் கேப்" ரங்கா! பெயருக்கேத்த மாதிரி எந்நேரமும் ரோல் கேப்பை உடம்பு முழுக்க சுத்திக்கிட்டே வந்து மிரட்டுறாரு!
ஒரு சீன்ல, குடிபோதையில வேட்டியை நழுவ விடுற வில்லனைப் பார்த்து, ''வேட்டி அவுந்துடுச்சு டோய்!"" என அலறும்போது, டால்பி சவுண்ட் எபக்ட்ல நமக்கே கொஞ்சம் அதிரத்தான் செய்யுது!
படத்துல பஞ்ச் டயலாக்குக்கும் பஞ்சமேயில்லை... ரோட்டோரமா பூ விக்கிற கிழவிகிட்ட, "நான் ஜவுளிக்கடையில மட்டும்தான் ஜவுளி எடுப்பேன்! உன்னோட பூக்கடையில இல்ல!" என்ற பஞ்ச் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது!
கிளைமாக்ஸில் "எலி உருட்டுது! எலி உருட்டுது!
அரிசிப் பானை "தடதட"ங்குது!", என்ற பாட்டுக்கு மொத்த தியேட்டரும் ஆடுவதை பார்க்க முடியுது! வில்லனை பறந்துவந்து மிதிப்பதற்காக நாயகன் குஜய் எகிறும்போது, அவரோட தலை நிலாவுல போய் முட்டுற மாதிரி காட்டுறது பிரமிக்க வைக்குது!
மொத்தத்தில், வேட்டிக்காரன்... ஹாலிவுட் படங்களுக்கு போட்டிக்காரன்!
"நான் குடிச்சா தூங்கமாட்டேன்!
நாலு ரவுண்டு தாங்க மாட்டேன்!
வாந்தி எடுக்காம வீடுபோயி சேரமாட்டேன்!"
என்ற ஓப்பனிங் சாங்லயே கதாநாயகன் குஜய் தன்னோட காமெடியைக் காட்டியிருக்காரு!
ஏழைக்குடும்பத்தில் பிறந்த கதாநாயகனுக்கு வேட்டி வாங்கக்கூட பணமில்லாததால வெறும் டெர்பி கம்பெனி ஜுன்ஸை மாட்டிக்கிட்டு திரியராரு! அவரு ஆசைப்பட்ட மாதிரி வேட்டியை வாங்கினாராங்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்!
இந்தப் படத்தோட கதாநாயகியா 'ஃபோர்ஷா" நடிச்சிருக்காங்க! 'நறுக்"னு நாலு டூயட், மூணு மவுத் கிஸ், ரெண்டே ரெண்டு வசனம், சிங்கிள் பீஸ் டிரெஸ்னு தன்னோட பாத்திரத்தை உணர்ந்து தாராளமா நடிச்சிருக்காங்க!
படத்தோட நாயகன் குஜய், எந்த வேலைக்கும் போகாம, நாலஞ்சு காமெடி பீஸ்களை கூட வச்சுக்கிட்டு நாட்டுல நடக்குற அநியாயங்களை தட்டிக் கேக்குறாரு!படத்துல நாயகனோட மோதுறதுக்காக புதுசா அறிமுகமாகற வில்லன் பெயர் "ரோல் கேப்" ரங்கா! பெயருக்கேத்த மாதிரி எந்நேரமும் ரோல் கேப்பை உடம்பு முழுக்க சுத்திக்கிட்டே வந்து மிரட்டுறாரு!
ஒரு சீன்ல, குடிபோதையில வேட்டியை நழுவ விடுற வில்லனைப் பார்த்து, ''வேட்டி அவுந்துடுச்சு டோய்!"" என அலறும்போது, டால்பி சவுண்ட் எபக்ட்ல நமக்கே கொஞ்சம் அதிரத்தான் செய்யுது!
படத்துல பஞ்ச் டயலாக்குக்கும் பஞ்சமேயில்லை... ரோட்டோரமா பூ விக்கிற கிழவிகிட்ட, "நான் ஜவுளிக்கடையில மட்டும்தான் ஜவுளி எடுப்பேன்! உன்னோட பூக்கடையில இல்ல!" என்ற பஞ்ச் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது!
கிளைமாக்ஸில் "எலி உருட்டுது! எலி உருட்டுது!
அரிசிப் பானை "தடதட"ங்குது!", என்ற பாட்டுக்கு மொத்த தியேட்டரும் ஆடுவதை பார்க்க முடியுது! வில்லனை பறந்துவந்து மிதிப்பதற்காக நாயகன் குஜய் எகிறும்போது, அவரோட தலை நிலாவுல போய் முட்டுற மாதிரி காட்டுறது பிரமிக்க வைக்குது!
மொத்தத்தில், வேட்டிக்காரன்... ஹாலிவுட் படங்களுக்கு போட்டிக்காரன்!
Labels:
சிரிப்பு,
திரை விமர்சனம்,
நகைச்சுவை,
நையாண்டி
Subscribe to:
Posts (Atom)