Thursday, March 11, 2010

கல்லா கட்டத் தொடங்கி விட்டார்கள்!

இதோ நித்தியானந்தனின் பெயரால் அவரவருக்கு கல்லா கட்டும் பணி வெகுவிமர்சையாக தொடங்கி விட்டது! நேற்றுவரை நித்தியானந்தனை உலகைக்காக்க வந்த அவதாரமாக விளம்பரப்படுத்திய குமுதம் இன்றோ அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆச்சர்யக்குறியோடு விமர்சிக்கிறது! சகிக்கல சாமியோவ்!
அவரோட வீட்டுக்குள்ள அவர் குளிச்சிட்டு நிர்வாணமா வந்தாராம். அதை திருட்டு காமிராவில் பார்த்த குமுதம் ரிப்போர்ட்டருக்கு அதிர்ச்சியா இருந்ததாம். எவண்டா உன்னை அடுத்தவன் படுக்கை அறையை, குளியல் அறையை எட்டிப் பார்க்கச்சொன்னது? அப்படியே அவரோட கக்கூசையும் எட்டிப் பார்க்கறதுதான?? இன்னைக்கு எட்டிப் பார்த்த உனக்கு அவனைப் பற்றி பக்தித்தொடர் எழுதியபோது புத்தி எங்க போனது???
நித்தியானந்தனுக்கு இருபால் ஆசை இருக்குதுன்னு இன்னொரு அதிர்ச்சித்தகவல் சொல்றாங்க! அடுத்த வாரம், அவரு தெருநாயைக்கூட விட்டு வைக்கலைன்னும் சொல்வாங்க! அதிர்ச்சியோ அதிர்ச்சி!! ஆக மொத்தம் இப்போ இந்த நித்தியானந்தம் என்ன பண்ணினாலும் இவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சிதான்!!! நித்தியானந்தத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பது தெரிந்துதான் இந்த மாதிரி மறைமுகமாக அப்ரூவராகும் முயற்சியில் பலரும் இறங்கி இருக்கிறார்கள்.
குமுதத்தை தொடர்ந்து எழுத்தாளர் சாருநிவேதிதா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சியில், அதே குமுதம் ரிப்போர்ட்டரில் தொடங்கியிருக்கிறார்! இவரை எல்லோரும் ஹீரோவாக தலையில் வைத்துக் கொண்டாடும் ஜீரோ டிகிரியை இதுவரை நான் படித்ததில்லை, கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது இவர் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடங்கியிருக்கும் தொடரின் தொடக்கத்தைப் பார்த்ததுமே இவரது எழுத்து எவ்வளவு "ஜனரஞ்சகமாக" இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது!
தன்னை ஒண்ணுந்தெரியாத அப்பாவியாக காட்டிக்கொள்ள, தன்னை நித்தியானந்தனுக்கு அறிமுகப்படுத்திய நடிகை ராகசுதாவை, கூட்டிக்கொடுக்கும் மாமா வேலை பார்ப்பதற்கு ஒப்பாகச் சொல்லி, தான் மட்டும் தப்பிக்க முயற்சி செய்கிறார்! இவருக்கும் ராகசுதாவுக்குமான குறுஞ்செய்தி உரையாடலை வெளியிட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். அப்பொழுதும்கூட சாமியாரின் மீதான "தொட்ட குறை, விட்ட குறை" அபிமானம் குறையாமல் காட்டிக்கொள்ள, நித்தியானந்தனின் தியானத்தை இப்பவும் புகழ்கிறார். "இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட நித்தியானந்தா எனக்குக் கற்பித்த நித்ய தியானம் என்ற அருமையான தியானத்தைச் செய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்." எனக் புகழும் இவருக்கு, ராகசுதாவை இகழ என்ன யோக்கியதை இருக்கிறது என்று புரியவில்லை!
அப்பாவி ஜனங்களோ, நடிகையோ சாமியாரிடம் மாட்டினால் அவர்களை நாறடிக்கும் ஊடகங்கள்,அதே சாமியாரிடம் பணம் பெற்றுக்கொண்டு, தன் வாசகர்களிடம் விளம்பரப்படுத்தி, வருமானம் பார்த்த ஒரு எழுத்தாளரை, மீண்டும் அதுகுறித்து தொடர் எழுத வைத்து, அதற்காக மீண்டும் அவருக்கு சன்மானம் வழங்குவதை நினைத்தால், "பலே! பத்திரிக்கை தர்மம்!" என புல்லரிக்க வைக்கிறது!!!

2 comments:

  1. நித்யானந்தரிடம் சாருவின் புலம்பல்கள்:

    http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post_11.html

    ReplyDelete
  2. the one best way is, only one blogger should subscribe kumudam.com and paste this chaaru's page in their blog, so that kumudam reporter's sale will be down.

    Or let us buy 1 kumudam reporter, scan that page and paste in our blog. so that reporter sale will be down.

    ReplyDelete